சடலத்தை எரித்துக் கொண்டிருந்த போது அதே தீயில் குதித்து உயிரிழந்த நபர்..!

குஜராத்தின் வதோதராவில், இறுதி ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தபோது, ​​சோலங்கி (30) என்ற நபர் வெளியில் இருந்து ஓடி வந்து தீயில் குதித்து உயிரிழந்துள்ளார். 

குஜராத்தின் வதோதராவில், புறநகர் பகுதியில் உள்ள தஷ்ரத் கிராமத்தில் உள்ளூர் கிராம மக்கள் சுடுகாட்டில் உள்ளூர்வாசி ஒருவரின் இறுதி ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தபோது, ​​சோலங்கி (30) என்ற நபர் வெளியில் இருந்து ஓடி வந்து தீயில் குதித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் பலர் ஓடி வந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும், பாதிக்கப்பட்டவரின் தாயும் சம்பவ இடத்திற்கு வந்தார். ஆனால் அவரது உடலை தீயிலிருந்து வெளியே எடுத்த நேரத்தில், அவரது உடல் ஏற்கனவே பாதி எரிந்த நிலையில், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் விரலில் அணிந்திருந்த மோதிரத்தின் மூலம் அவரது தாயார் அவரது உடலை அடையாளம் காட்டினார். பலத்த காயமடைந்த சோலாங்கியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சோலங்கிக்கு நீண்டகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டதால், அவரது தாயார் சோலங்கியை கவனித்து வருவதாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தெரிவித்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.