இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று இரவு 12 மணியுடன் நிறைவு..!

குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20,53,837 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தமிழகத்தில் பல்வேறு  துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 29ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள், குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால் அவகாசம் இன்று இரவு 12 மணியுடன்  நிறைவு பெறுகிறது. குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20,53,837 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.