உருமாறிய கொரோனாவால் நிறுத்தப்பட்ட சேவை ! நாளை மீண்டும் தொடங்குகிறது

உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில்,நாளை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது

பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி அதாவது நாளை முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது வரை இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.