எதற்கும் துணிந்தவன் படத்தின் தற்போதைய நிலை.! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்“. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

etharkum thuninthavan

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு, இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தமிழ்நாட்டில் குற்றாலத்தில் தொடங்கினார்.

etharkum thuninthavan

இப்போது, பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது மற்றும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. படத்தில் நடிக்கும் பல நடிகர்களும் தங்கள் டப்பிங் பணிகளை  முடித்துவிட்டார்கள், இந்த வேகத்தில், படம் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் தினத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.