நதிநீர் விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள்.! உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்.!

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். – உச்சநீதிமன்றம் விமர்சனம்.

தென்பெண்ணை ஆறு குறுக்கே அணை கட்டும் விவகாரம், கர்நாடக மாநிலத்துடனான நீர் பங்கீடு குறித்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்துள்ளது.

இந்த மனு மீதான இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் பேசுகையில், 2020ஆம் ஆண்டு தென்பெண்ணை ஆறு நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. ஆனால் 2020க்கு பிறகு அந்த கூட்டம் நடைபெறவில்லை என குற்றம் சாட்டியது.

இதனை அடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். என காட்டாக தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

பின்னர் விளக்கம் அளித்த மத்திய அரசு, இது குறித்த தீர்ப்பாயத்தை அமைப்பதாக கூறியது. அதன் பிறகு இன்னும் 4 வார காலத்திற்குள் தீர்ப்பாயம் அமைத்து அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை டிசம்பர் 14 அன்று ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment