தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டம் 170 ரன்னில் சுருண்ட இந்திய அணி ..!

  • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது.
  • மூன்றாவது விக்கெட்டுக்கு களமிங்கிய சிவம் துபே அரைசதம் அடித்து 54 ரன்கள் குவித்தார்.
  • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்தனர்

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது.இதை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கியது.இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே கே.எல் ராகுல் 11 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

பின்னர் சிவம் துபே களமிறங்கினார். இவர் இறங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் 15 ரன்னில் வெளியேறினர்.பின்னர் நிதானமாக விளையாடிய சிவம் துபே நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய சிவம் துபே அரைசதம் அடித்து 54 ரன்கள் குவித்தார்.இதை அடுத்து இறங்கிய மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் மட்டும் கடைசிவரை விக்கெட்டை இழக்காமல் 33 எடுத்து களத்தில் நின்றார்.

இந்நிலையில் இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்தனர்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ,ஹேடன் வால்ஷ் ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.171 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.

author avatar
murugan