கரூரில் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

எம்சி சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாஸ் அரசு ஒப்பதாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.  இந்த நிலையில், கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, கரூரில் அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எம்சி சங்கர் ஆனந்துக்கு சொந்தமான “சங்கர் ஃபார்ம்ஸ்” பண்ணை வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாகனங்களில் வந்த 6 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்