1,191 ஏக்கர் நிலத்தை மீட்க உத்தரவு.! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.!

மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை விமான நிலைத்திற்கு அருகே உள்ள மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலமானது புதுச்சேரியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை இந்து அறநிலையத்துறையினர் மீட்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கைக்கு தேவைப்பட்டால் கால்வதுரையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment