இரண்டாக உடைந்த கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம்..!

மகாராஷ்டிர மாநிலம் சிப்லூனில் மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் நகரில் மதியம் 2:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் சிப்லுன் என்ற இடத்தில் கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம் தூண் இடிந்து விழுந்தது. சிறிது நேரத்தில் மேம்பாலத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் இயந்திரம் சேதமடைந்தது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒரேயடியாக யு-டர்ன் எடுத்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

author avatar
murugan