13 பேருடன் மாயமான விமானம் !விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு  இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்  மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்பட்டுள்ளது.மேலும் விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.