முதல் போட்டியே ஆட்டநாயகி விருதை பறித்து சென்ற இந்திய வீராங்கனை ..!

தென்னாபிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 போட்டி கொண்ட தொடரிலும் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்பிரிக்கா 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மரிசேன் காப் 54 ரன்கள் அடித்தார்.இந்திய அணி சார்பில் கோஸ்வாமி மூன்று விக்கெட் பறித்தார்.
பின்னர் 165 ரன்கள் இலக்கு களமிறங்கிய இந்திய அணி 44.1 ஓவரில் 165 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கொடுத்து இந்திய அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரியா புனியா 75 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
மேலும் பிரியா புனியா தனது முதல் ஒரு நாள் போட்டியில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றதால் அவருக்கு ஆட்டநாயகி விருது கொடுக்கப்பட்டது.இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது.

author avatar
murugan