தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தை!

தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கசியபாத்தில் 28 வயதான வாசுதேவ் தனது மனைவி குப்தா, 4 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றக்கூடிய வாசுதேவுக்கும் அவரது மனைவி குப்தாவுக்கும் இடையில் அண்மையில் சண்டை வந்துள்ளது. வாக்குவாதம் வலுக்கவே குப்தா தனது 3 வயது மகனை தன்னுடன் அழைத்துக்கொண்டு எங்கேயோ சென்றுவிட்டார். எனவே அவர்களின் 4 வயது மகள் வாசுதேவுடன் இருந்துள்ளது.

மனைவியை காணவில்லை என வாசுதேவ் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், அவர்களின் மகளும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அழுகையை நிறுத்தாததால் கோவத்தில் கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்துள்ளார். அதன் பின் குழந்தையின் சடலத்துடன் மனைவியை தேட துவங்கியுள்ளார். இந்நிலையில் குப்தாவின் சகோதரன் அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்து யாரும் இல்லாததால் வாசுதேவுக்கு போன் செய்துள்ளார்.

அப்பொழுது அவர் குழந்தையை கொலை செய்துவிட்டு குப்தாவை தேடுவதாக கூறியதை அடுத்து அதிர்ச்சியடைந்த குப்தாவின் சகோதரர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். போலீசார் வாசுதேவை உடனடியாக கைது செய்து அவரை விசாரித்ததில், ஏற்கனவே மனைவியை காணவில்லை என மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தொடர்ச்சியாக குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

Rebekal

Recent Posts

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

10 mins ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

58 mins ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

1 hour ago

கட்டப்பா எதற்கு துரோகி ஆனார்? விரிவான விவரத்துடன் பாகுபலி : Crown of Blood!

Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…

1 hour ago

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

2 hours ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

2 hours ago