இருவரின் காதலை நிராகரித்ததற்காக பாகிஸ்தானில் வசித்து வந்த இங்கிலாந்தை சேர்ந்த 25 வயது பெண்மணி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய காலங்களில் எல்லாம் ஒரு பெண்ணிடம் சென்று தனது காதலை ஆண்கள் கூறிய பின்பு அந்த பெண்ணை நிராகரித்தாலும் எப்படி அந்த பெண்ணை சம்மதிக்க வைக்கலாம் அந்தப்பெண் விரும்பும்படி நாம் எப்படி மாறலாம் என்பதற்காக ஆண்கள் தங்களை வருத்திக் கொள்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒரு ஆண் பெண்ணிடம் சென்று எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று கூறிய பின், பெண் அதை நிராகரிக்கிறாள் என்றால் உடனடியாக எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆசிட் அடிப்பதும், கத்தியால் குத்தி கொலை செய்வது, கற்பழித்து கொலை செய்வது என பல கொடூரமான செயல்களை சில ஆண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த 25 வயதுடைய இங்கிலாந்து பெண்மணி மெய்ரா என்பவர் தன்னிடம் வந்து காதலை கூறிய இரண்டு நபர்களிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தற்போது இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் மாமா இது குறித்து கூறுகையில், சாத் அமீர் பட் மற்றும் ஜாஹித் ஜாதுன் ஆகிய இருவர் மெய்ராவிடம் அவர்களது காதலை கூறியதாகவும், ஆனால் இதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே நீ கடுமையான பின்விளைவுகளை சந்திப்பாய் என அப்பொழுதே அவளிடம் அவர்கள் சொன்னதாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினரின் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், சாதி அமீர் பட் மீது தான் அதிகம் சந்தேகம் உள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…