பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனம் சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். ஏற்கனவே, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் சரியாக ஓடவில்லை என்றும் வசூலிலும் சற்று தோல்வியை சந்தித்தள்ளது.
பொன்னியின் செல்வன் 2 வசூல்:
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான நாளில் இருந்து உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்திருந்தது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, படம் 300 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.