சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை..!

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி ராஜு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் சில நாட்களுக்கு முன் 6 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த ராஜு (30) என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு சிறுமி வராததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின் காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமி ராஜு வீட்டுக்கு சென்றது உறுதியானது. இதைத் தொடர்ந்து ராஜு வீட்டில் சோதனை செய்தபோது சிறுமியின் உடல் படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமியை கொலை செய்த ராஜு தலைமறைவாகியதால் அவரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். மேலும்,  ராஜு குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகையை ஹைதராபாத் காவல் துறை ஆணையர் அஞ்சனிகுமார் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி ராஜு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
murugan