தொண்டு நிறுவனங்களை முழுவதுமாக முடக்கி விடும் -கனிமொழி

தொண்டு நிறுவனங்களை முழுவதுமாக முடக்கி விடும்  என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்  நடைபெற்றது.  அந்தவகையில்  மக்களவை மற்றும் மாநிலங்களவையில்  வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா  நிறைவேற்றம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (foreign contribution regulation act )என்பது  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சரியான  முறையில் பதிவு செய்து, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதே  ஆகும்.வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா சான்றிதழை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  மத்திய அரசிடம் வழங்க வேண்டும். தங்களுக்கு வரும் மொத்த வெளிநாட்டு நிதியில் 20  % மேல் நிர்வாக செலவிற்கு  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது. ஆதார் எண்ணை அடையாளச் சான்றிதழாக  கட்டாயம் அளிக்க வேண்டும். பிரத்யேக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா  வங்கி கணக்குகளில் மட்டுமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெற வேண்டும். மேலும் பொதுத்துறை ஊழியர்கள் வெளிநாட்டு நிதியுதவி பெறும் செயல்களில்  ஈடுபடக் கூடாது  என்று இந்த  மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,நாட்டின் முன்னேற்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆற்றியுள்ள பெரும் பங்கை நிராகரிக்க முடியாது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்தவற்றில் இத்தொண்டு நிறுவனங்கள் அளப்பறிய பங்காற்றியுள்ளன. இத்தகைய தொண்டு நிறுவனங்கள் இல்லாதிருந்தால், பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கும் இத்தொண்டு நிறுவனங்கள் குரலற்றவர்களின் குரலாக இருந்து வருகின்றன. மத்திய அரசு செயல்படுத்த உள்ள அந்நிய நிதி ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2020, எதிர்ப்பு குரல்களை முடக்கும் பிஜேபியின் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. இச்சட்டம் தொண்டு நிறுவனங்களை முழுவதுமாக முடக்கி விடும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

3 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

7 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

8 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

8 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

8 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

9 hours ago