முழுமையான பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் – தேர்தல் ஆணையம்!

முழுமையான பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பீகாரில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி யாருக்கு என ஆவலாக அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தாமதமாவது குறித்து தேர்தல் ஆணையம் இரண்டாவது முறையாக விளக்கம் அளித்துள்ளது.

அதில், நள்ளிரவு வரை தேர்தல் வாக்குகள் என்ணுவதற்கான நேரம் நீளும், எனவே முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் என தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரிகள் அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal