மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர்!

சென்னை தலைமை செயலகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆணையை வழங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இதுபோன்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வான காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதனிடையே, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை பெற புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2023 ஆகும். அதன்படி, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment