உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் மீது வழக்கு..!

சீதா தேவியை அவமதிக்கும்வகையில் பேசியதாக உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா மீது, பீகாரில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினேஷ் சர்மா, சீதாதேவிதான் உலகிலேயே சோதனைக்குழாய் முறையில் பிறந்த முதல் குழந்தை என குறிப்பிட்டிருந்தார். துணை முதலமைச்சரின் இந்தக் கருத்தால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், பீகார் மாநிலம் சீதாமரி (Sitamarhi ) மாவட்ட நீதிமன்றத்தில், சந்தன் குமார் சிங் ((Chandan Kumar Singh)) வழக்கு தொடுத்துள்ளார். திணேஷ் சர்மா கூறிய கருத்து சீதா தேவியை அவமதிப்பதாகவும், மத உணர்வை இழிவுபடுத்துவதாகவும் இருப்பதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீது, வரும் 8-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment