தாலி கட்டும் நேரத்தில், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள தனது காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகளால் மணமகன் மற்றும் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கும், கோத்தகிரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. அவர்களின் சமுதாய வழக்கப்படி மணமகனை தாலி கட்டுவதற்கு முன்பு பிடித்திருக்கிறதா என மூன்று முறை சாமியார் கேட்கையில் மணப்பெண் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு கேட்ட போது பிரியதர்ஷினி இரண்டு முறை அமைதியாக இருந்துவிட்டு மூன்றாவது முறை கேட்கையில் இல்லை என கூறியுள்ளார்.
மேலும், தனது காதலனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் அவர்களை பொருட்படுத்தாமல் தன்னை அவர் காதலித்து வந்ததாகவும், அவர் வந்து தாலி காட்டுவார் ஒரு மணி நேரம் பொறுங்கள் எனவும், அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அப்பெண் கூறியதால் மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் மணப்பெண்ணின் தாயார் அடித்து அதட்டினாலும், அப்பெண் தாலி கட்டிக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் செய்வதறியாது மணமகனும் குடும்பத்தினரும் திகைத்து போய் நிற்கின்றனர்.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…