பலகை இங்கே உள்ளது சாலையை எங்கைய்யா??

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது காமராஜபுரம். இங்கு மீனவர்கள் மற்றும் பணை தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். கடந்த பாத்து ஆண்டுகளுக்கு முன், சாலை அமைத்து தருவதாக கூறி வந்தனர். இந்நிலையில் ரூ19லட்சத்தி 50ஆயிரம் நிதி ஒடுக்கப்பட்டது.

இந்நிலையில், 2017-18 ஆம் டார் சாலை அமைத்ததாக கூறி அங்கு அறிவிப்பு பலகை வைக்க பட்டது. இது அங்குள்ள மக்களீடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வடிவேல் நகைச்சுவை போல, கிணறு வெட்டிய ரசீது கையில் இருக்கிறது. அனால் கிணற்றை காண வில்லை என்பதுபோல, பலகை இங்குள்ளது, ஆனால் சாலையை காணவில்லை. என்று மக்கள் குற்றம் சாற்றி வருகின்றனர்.