#BREAKING: ஏர் ஏசியா விமானம் புறப்பட்டபோது பறவை மோதியது.! விபத்து தவிர்ப்பு .!

ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து  மும்பை செல்லும் ஏர் ஏசியா விமானம் இன்று காலை புறப்பட்டபோது பறவை ஒன்று மோதியதால் உடனடியாக விமானி விமானத்தை தரையிறக்கினார்.

இதனால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது எனவும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விமானத்தின் பரிசோதனைகள் முடித்த பின்னர் விமானம் மீண்டும் புறப்படும் என  விமான நிலைய இயக்குனர் வினோத் சர்மா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர்  இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan