வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரனுக்கு பதில் நடிக்க இருந்த நடிகை?

Vaaranam Aayiram வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் என்றால் வாரணம் ஆயிரம் படத்தை கூறலாம். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த  2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா ஸ்பந்தனா, தீபா நரேந்திரன், வீரா, பப்லூ பிரிதிவீராஜ், விடிவி கணேஷ்  உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.  படமும் சரி பாடல்களும் சரி வெளியான சமயத்தில் இருந்து தற்போது வரை ரசிகர்களின் மனதில் நெருக்கமானதாக  இருந்து வருகிறது. இப்போது இந்த திரைப்படத்தை ரீ-ரிலீஸ்  செய்யப்பட்டால் கூட படம் புதிதாக ரிலீஸ் ஆனது போல  கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

அதற்கு உதாரணமாக கடந்த சில நாட்களுக்கு  முன்பு காதலர் தினத்தை முன்னிட்டு கூட படம் ரீ-ரிலீஸ்  ஆனது.  அப்போது இளைஞர்கள் படத்தை கொண்டாடி தீர்த்ததை நீங்களே பார்த்திருப்பீர்கள்.  இப்படி தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத ஒரு படமாக இருக்கும் இந்த திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க விருந்த  நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி இந்த திரைப்படத்தில் முதலில் நடிகை  தீபிகா படுகோனேவிடம் தான் நடிக்கவிருந்தாராம். வேறு படத்தில் நடித்து வந்த காரணத்தால் கால்ஷீட் பிரச்சனை  காரணமாக படத்தில் அவர் நடிக்க வில்லையாம். அதன் பிறகு தான் பட குழு அந்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூற பிறகு அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் நல்ல வேலை  அந்த கதாபாத்திரம் வேறு யாரும் நடிக்கல என்பது போல கூறி வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.