வீடு கட்ட மானியமாக ரூ.1 லட்சம் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்…

PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக் கடனும் வாங்கப்படுகிறது.

வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இதில் 6.5% வரை வட்டியுடன் மானியம் பெறலாம், மேலும் நீங்கள் வாங்கும் கடனை 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.

இப்பொழுது இந்த திட்டத்திற்கு தேவையான அணைத்து விவரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான தகுதி

  • உங்களுக்கு 18 வயதாகி இருக்க வேண்டும்.
  • உங்களுக்கு ஏதேனும் சொந்தமாக வீடு இருக்கக்கூடாது.
    இதற்கு முன் வீடு வாங்குவதற்கான ஆதாரங்களை ஏதெனும் ப்ரோக்கர்களிடம்  வழங்கியிருக்கக் கூடாது.
  • குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட நபராகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவாகவும், நடுத்தர வருவாய் கொண்டவராக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  1. ஆதார் அட்டை
  2. வருமான சான்றிதழ்
  3. தொலைபேசி எண்
  4. தற்போதைய வசிக்குடியை வீட்டின் ஐடி
  5. பாஸ்போட் அளவு கொண்ட புகைப்படம்
  6. PM வங்கிக் கணக்கின் விவரம்

இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து வீட்டுக் கடன் மானியத்தைப் பெறுவதற்கு 2024 டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க PMAY-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும்.

உள்ளே சென்றதும், நான்கு விருப்பங்கள் காட்டப்படலாம், உங்களுக்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். (ISSR) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்த பின்னர், உங்கள் ஆதார் எண் மற்றும் பெயர் பின்வரும் பக்கத்தில் கேட்கப்படும் அதனை உறுதி செய்யவும்.

அப்போது வடிவம் A என தோன்றும். அதனை முழுமையாக நிரப்ப வேண்டும். ஒவ்வொரு ஒவ்வொன்றையும் கவனமாக படித்து நிரப்பவும். அனைத்தையும் முடித்த பிறகு கேப்ட்சாவை கொடுத்துவிட்டால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.