பெருந்தொற்றின் 2வது அலை வீசத்தொடங்கியது..ஊரடங்கு அறிவிப்பு…

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்  2-வது அலை தாக்கத்தொடங்கியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று திங்கள் கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், வரும் புதன் கிழமை முதல் அயர்லாந்தில் 6 வாரங்களுக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார்.

கொரோனா கட்டுப்பாடுகளை எல்லாம் மதித்து செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்பட்டால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய  மைக்கேல் மார்ட்டின் கொரோனா  அச்சுறுத்தலை மிக தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த 6 வாரங்களுக்கு நாம்  ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் அப்போது தான் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும். என்றபோதிலும் கடந்த காலங்களில் இருந்து வந்த  கொண்டாட்டங்களை போல இவ்வாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருக்காது என்றார்.

ஊரடங்குகளில் சில விதிவிலக்குகள் இருக்கும் என்று அயர்லாந்து அரசு அறிவித்து உள்ளது. அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படும் என்றாலும், பார்கள் மற்றும் உணவு விடுதிகளில்  டேக் அவே முறை செயல்படும்.

5 கி.மீட்டர் தொலைவுக்கு மேல் மக்கள் யாருக்கும் பயணிக்க அனுமதி கிடையாது தற்போதைய 6 வார அறிவிப்பின் படி டிச.,1ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

இந்நிலையில் அயர்லாந்தில் புதியதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

author avatar
Kaliraj