இந்தியாவில் மோடி ஏற்படுத்திய பேரழிவு தான் கொரோனாவின் 2-ஆம் அலை – மம்தா பானர்ஜி !

இந்தியாவில் மோடி ஏற்படுத்திய பேரழிவு தான் கொரோனாவின் இரண்டாம் அலை  என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. ஒருபுறம் மக்கள் கொரோனாவால் உயிரிழந்தாலும், மறுபுறம் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக பல மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆக்சிஜனின்றி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால், சுகாதாரத்துறை பெரும் சிக்கலை எதிர் கொண்டு வருவதுடன் நாளுக்கு நாள் நாட்டின் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தினாஜ்பூர் எனும் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்,கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது நாட்டில் வீரியமாக உள்ளதாகவும், இது மோடி நாட்டில் ஏற்படுத்திய பேரழிவு என்றுதான் நான் கூறுவேன் எனவும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தடுப்பூசிக்கும் ஆக்சிஜனுக்கும் நாட்டில் பஞ்சம் நிலவும் சூழ்நிலையும் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

கொரோனாவை நாட்டில் கட்டுப்படுத்துவோம் என மத்திய அரசு கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக கூறினாலும், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்காக வெளிமாநிலங்களில் இருந்து மக்களை அழைத்து வந்து இங்கும் கொரோனாவை பரப்ப தான் பாரதிய ஜனதா இவ்வாறு செய்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மையங்கள் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், நீங்கள் அனைவரும் இந்த மாநிலத்தின் குடிமக்கள் எனவும், நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு காவலாளியாக நான் இருப்பேன் எனவும் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

Recent Posts

இந்த படத்தில் ராஷ்மிகாவை போடுங்க சார்! சிபாரிசு செய்த சிவகார்த்திகேயன்?

சென்னை : தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி…

9 mins ago

பிசிசிஐக்கு உதவும் தோனி? ஃபிளெமிங்கை தலைமை பயிற்சியாளராக சம்மதிக்க வைக்க புதிய திட்டம்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயலாற்ற வைக்க தோனி பிசிசிஐ உதவுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான…

37 mins ago

பாரம்பரியமிக்க பருப்பு உருண்டை குழம்பு இதுபோல செஞ்சி கொடுங்க..!

பருப்பு உருண்டை குழம்பு -பாரம்பரியமான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: கடலை பருப்பு =அரை கப் துவரம்…

43 mins ago

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்.. ஒருவர் உயிரிழப்பு.!

சென்னை: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இங்கிலாந்தின் லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்…

53 mins ago

மரம் விழுந்து கணவர் பலி..மனைவி காயம்! பத பதைக்க வைக்கும் வீடியோ காட்சி!

சென்னை : ஹைதராபாத்தில் மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினர் மீது மரம் விழுந்ததில் கணவர் உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார். இன்று ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு…

1 hour ago

இரவு வரை இந்த 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.!

சென்னை: அடுத்த மூன்று நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்கிற மாட்ட வாரியான பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு…

1 hour ago