அண்ணாத்த படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு…!

நாளை மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ‘சாரகாற்றே’ என்ற இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் உள்ளிட்ட பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை, சன் பிக்சர்ஸ் உருவாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று இப்படம் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது நாளை மாலை 6 மணிக்கு இப்படத்தின் ‘சாரகாற்றே’ என்ற இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.  இப்பாடல் ரஜினி மற்றும் நயன்தாரா இடையேயான ரொமான்டிக் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.