#Breaking: 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகம், திரையங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மார்ச் 31 தேதி வரை மூட உத்தரவிட்டது.

மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்க பள்ளிகல்வித்துறை ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது.