டெல்லியில் 106 வயதான முத்தர் அஹ்மத், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காய்ச்சல் மற்றும் சளியால் அவஸ்தி பட்டு வந்த அஹ்மத், டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்தார். அவரை அனைவரும் கரவொலி எழுப்பி அனுப்பி வைத்தனர்.