எனது அழைப்பை ஏற்று தமிழகம் வந்த பிரதமருக்கு நன்றி – முதல்வர் பழனிசாமி உரை

பிரதமர் மோடி நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்க நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து, கிருஷ்ணர் சிலையை நினைவு பரிசாக முதலமைச்சர் பழனிசாமி அளித்தார். இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி பேசுகையில், எனது அழைப்பை ஏற்று புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார். பிரதமர் தொடங்கி வைக்கும் திட்டங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி என்றும் கொரோனா காலத்தில் தமிழக அரசின் பணிகளை பாராட்டிய பிரதமருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருந்த மத்திய அரசுக்கு நன்றி.

தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தமிழரின் பொறியியல் பெருமையை உலகுக்கு பறைசாற்றுகிறது கல்லணை எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். நீர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. கொரோனா காலத்திலும் முதலீட்டாளர்களை ஈர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் மமுதல்வர் பேசியுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

வீடு.. எருமை.. தாலி.., விரக்தியின் விளிம்பில் மோடி.! ராகுல் காந்தி காட்டம்.!

Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…

4 mins ago

கோலி, சூர்யாவை விட ஹர்திக் தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!

Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப்  தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…

5 mins ago

ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் மயங்க் யாதவ் ? இது தான் காரணம் !

Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…

16 mins ago

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…

27 mins ago

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

53 mins ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

1 hour ago