தஞ்சாவூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு..! 650 காளைகள் , 450 காளையர்கள் பங்கேற்பு…!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வீரர்களுக்கும், காளைகளுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடிக்கு தென்னை நார்கள் போடப்பட்டு உள்ளது. அதேபோல் காளைகள், பார்வையாளர் இருக்கும் பகுதிக்கு சென்றுவிடாமல் இருக்க இரும்பு கம்பிகள், கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது .

முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகள் மற்றும் 450 காளையர்கள் பங்கேற்று உள்ளனர்.

தஞ்சை, பெரம்பலூர்,  திருச்சி, அரியலூர்,  புதுக்கோட்டை, உள்பட  பகுதிகளில் இருந்து 650 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

author avatar
Dinasuvadu desk