இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு பாடபுத்தக்கங்கள் அனுப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு பாடபுத்தக்கங்கள் அனுப்பப்படும்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில், இம்மாத இறுதிக்குள் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படும் என்றும், நாட்கள் குறைவாக உள்ளதால் முக்கிய பாடங்களை மட்டும் படிக்க சில பக்கங்களை குறைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.