காஷ்மீரில் தொடர்ந்து பாஜக தலைவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு.!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் மொஹிண்ட்போரா பகுதியில் வசிக்கும் அப்துல் ஹமீத் நஜர் (38)  இன்று காலை  நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, ஓம்போரா அருகே அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.கடந்த ஒரு வாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது தாக்கல் நடைபெற்று வருகிறது. இது மூன்றாவது தாக்குதல் ஆகும்.

இதற்கு முன் கடந்த புதன்கிழமை  தெற்கு காஷ்மீரில் காசிகுண்டில் உள்ள பாஜக பஞ்சாயத்து தலைவர் சர்பஞ்ச் சஜாத் அகமது கான்டே அவரது இல்லத்தில் வெளியே தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தகத்து.

author avatar
murugan