ரஷ்யாவில் உள்ள மேற்கு பகுதியான ரியாசான் நகரில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயை அணைக்க முயற்சிப்பதற்குள் தீ கட்டுக்கடங்காமல் பல இடங்களிலும் வேகமாக பரவியதால் அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மிக வேகமாக பரவ தொடங்கிய தீ மருத்துவமனை முழுவதும் சூழ்ந்து கொண்டது. எனவே பலர் வெளியேற முடியாமல் மருத்துவமனையிலேயே சிக்கியுள்ளனர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அதற்குள்ளாக 3 நோயாளிகள் இந்த தீவிபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்னர்.
மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற பிற நோயாளிகள் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோளாறான வெண்டிலேட்டர் காரணமாக தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…