மும்பையில் பயங்கர தீ விபத்து..! 6 பேர் உயிரிழப்பு..!

மும்பையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு கோரேகானில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்  6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள  HBT ட்ராமா மருத்துவமனையிலும், கூப்பர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இன்று அதிகாலை 3:50 மணியளவில் பல மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  மாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் தீ வேகமாக பரவியதால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதற்கிடையில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காலை 6 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தீ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

author avatar
murugan