உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள மின்னணு பொருட்கள் (எலக்ட்ரானிக்) உற்பத்தி செய்யும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் படுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
வெடி விபத்தை அடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாவட்ட ஐஜி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…