மேற்கு வங்கத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில ஆளுநர் கேஷரி நாத் திரிபாதி அறிக்கை அனுப்பியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகளில் ஒருவரான தற்போதைய கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை அம்மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிபிஐ அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பிறகு அவர்களை விடுவித்தனர்.
இந்தநிலையில் சிபிஐ மூலம் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை மத்திய பா.ஜ.க அரசு கவிழ்க்க முயல்வதாக கூறி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மேற்கு வங்கத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில ஆளுநர் கேஷரி நாத் திரிபாதி விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சிபிஐ நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களும் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே போராட்டம் நடைபெறும் இடத்திலேயே அவசர அவசரமாக மாநில அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்தியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…
சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…