ஆழ்துளை கிணற்றில் விழுந்த தெலுங்கானா மேதக் மாவட்ட சிறுவன் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் எனும் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் எனும் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில் வசித்து வரும் கோவர்தன் என்பவருக்கு சாய் வர்தன் எனும் மூன்று வயது குழந்தை ஒன்று உள்ளது. தனது தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்றடுகொண்டுள்ளார் சிறுவன்.

அப்பொழுது அங்கிருந்த மூடப்படாத 25 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார். உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், திடீர் மண்சரிவு ஏற்பட்டதால் குழந்தை கீழிறங்கியுள்ளது. 

இருப்பினும் தொடர்ந்த மீட்பு பணியில் குழந்தைக்கு அருகாமையில் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல மணிநேரம் முயற்சிக்கு பிறகு, குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை கலங்க செய்துள்ளது. 

author avatar
Rebekal