கொரோனா பரவல் எதிரொலி காரணமாக,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா 2 வது அலையானது விஸ்வரூபம் எடுத்து தீவிரமாகப் பரவி வருவதால்,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் கோரிக்கையில்,”அதிகப்படியான கொரோனா பரவலால் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிருவனங்களும் மூடப்பட்டுள்ளன.இதனால்,கல்லூரி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாக பாடம் நடத்தி வருகின்றனர்.
ஆனால்,தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் மட்டும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளோம். பள்ளிகளுக்கு மாணவர்கள் வராதபோது ஆசிரியர்கள் வருவது தேவையற்றது.
எனவே,கொரோனா 2 வது அலையின் பரவல்,கோடை வெயிலின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,ஆசிரியர்களை வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியாக பாடம் நடத்த தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும்”,என்று சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…