வருங்கால காதல் கணவரின் பெயரை டாட்டூ போட்ட பிக்பாஸ் பிரபலம்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

பிக்பாஸ் பிரபலமான வனிதா தனது வருங்கால கணவரான பீட்டர் பவுல் என்பவரது பெயரை கையில் டாட்டூ போட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். சமீப காலங்களில் அவர் பல சர்ச்சைக்கு உள்ளாகிய போதிலும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாமல் சினிமாவில் மட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையிலும் பிடித்து நின்றார். இதனையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் – 3 இல் கலந்து கொண்டு அனைத்து போட்டியாளர்களையும் வறுத்து எடுத்து விட்டார் என்றே கூறலாம். அதன் மூலம் பிரபலமான வனிதா அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் டைட்டிலையும் தட்டி சென்றார். தற்பொழுது யூடியூப் சேனலை தொடங்கி பிஸியாக வலம் வரும் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஆம் வரும் ஜூன் 27ம் தேதி பீட்டர் பவுல் என்பவருடன் மூன்றாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகிய இவருக்கு 2பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட வனிதா நடன இயக்குனரான ராபர்ட் அவர்களுடன் பழக்கம் இருந்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாக கூறிய இவர்களுக்கு சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. தற்போது நண்பரான பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்ய போவதாக அவரே அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்திருந்தார். அதற்கு அவரது மகளும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தனது வருங்கால கணவரான பீட்டர் பவுல் என்பவரது பெயரை கையில் டாட்டூ போட்ட புகைப்படத்தையும், பீட்டர் பவுல் அவரது கையில் வனிதா என்ற பெயரையும் டாட்டூ போட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Etched for love

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on