கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறி, சென்னை செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையில் , மேற்பார்வையாளரின் மண்டையை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழவரம் – அம்பேத்கர் நகரில் உள்ள அந்த டாஸ்மாக் கடையில், மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு மது வாங்க வந்த ஒருவரிடம், டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் ராமன் கூடுதலாகப் பணம் கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் மறுத்ததால் மேற்பார்வையாளர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற மது வாங்க வந்த நபர், ராமனின் தலையில் பீர் பாட்டிலால் அடித்து தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.
மண்டை உடைந்த நிலையில் அலறித்துடித்த ராமனை அங்கிருந்தவர்கள் பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார், மண்டையை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…