தேவர் ஜெயந்தி.! தேசிய நெடுஞ்சாலையில் 2 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு.!

நாளை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளை அக்டோபர் 20ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் மரியாதையை செலுத்த உள்ளார்.

இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

இன்று மற்றும் நாளை என 2 தினங்கள் தேனியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment