பிரதமர் மோடி வருகை… தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முன்னெச்சரிக்கை கைது.!

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் என்பவரை காவல்துறையினர் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.

இன்று சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு செஸ் விளையாட்டு கலைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதில் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதில், முக்கியமாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் என்பவரை காவல்துறையினர் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.

அவர் , பிரதமர் மோடி வருகையின் போது, கருப்பு நிற பலூனை பறக்கவிட்டு அதன் மூலம் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பை காட்ட இருந்ததாக  தகவல் வெளியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment