ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட  ஐஏஎஸ் அதிகாரிகள், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மேலும் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி மாநகராட்சி ஆணையர் தற்பகராஜ், உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராகவும், கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்