தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், நேற்று முதல், தேர்வு எழுதுபவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் நீட் தேர்வு குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘என்னை பொறுத்தவரையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை. ஆனாலும், இன்றைக்கு சட்ட ரீதியாக வேறு வழி இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.
ஆனால், இதில் இருந்து வெளிவர தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை இந்த ஆண்டே எடுத்து, அதில் வெற்றி பெறுவார்களா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், வருங்காலத்திலே நீட் தேர்வை விட்டு தமிழ்நாடு விலகுவது தான், தமிழக கிராம புற மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சரியாக இருக்கும்.’ என தெரிவித்துள்ளார்.
Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…
Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர்…
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…