முதலில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்த தமிழ் படம்.!

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டது. தற்போது தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை செய்துள்ளது. இதனால் திரைப்பட துறையினரும் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்த அனுமதி தர கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செய்தி மக்கள் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் கோரிக்கையை ஏற்று பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 

இந்த நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளனர். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்ற ஜெயபிரகாஷ் அவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளார்.