சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை மிரட்டிய நல்ல பாம்பு.!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது  வெறிச்சோடிய அந்த சாலையில் ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து வந்தது இந்நிலையில்  அந்த பாம்பை பிடிக்க காவல்துறையினர் முயற்சித்தனர். அப்போது  அந்த பாம்பு படமெடுக்க தொடங்கியது இதனால் அச்சமடைந்த காவலர்கள் உயிரின ஆர்வலர் ஒருவருக்கு தொடர்பு கொண்டனர் அப்போது அங்கு வந்த அந்த உயிரின ஆர்வலர் அந்த நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டார்.