ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு.!

ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ரம்பன் மாவட்டத்தில் கன மழை பெய்ததால் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டடு போக்குவரத்து பாதிகப்பட்டது. மேலும் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை துணை ஆய்வாளர் அஜய் ஆனந்த் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நெடுஞ்சாலையை சீர் செய்வதற்காக சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தங்களது பணியை தொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.