அண்ணா பல்கலைகழகத்தில் 1,169 பேராசிரியர்களுக்கு தடை

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. ஒரு சில கல்லூரிகளை தவிர.  இதில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் குளறுபடி அதிகமாக இருந்து வந்தது. செமெஸ்டர் பரிட்சையில் தோல்வி அடைந்து, மறுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவர்கள் ஏராளம். பேராசிரியர்களின் இந்த மெத்தன போக்கை இப்பொது அண்ணா பல்கலைகழகம் இதனை கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து 1,169 பேராசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.