தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு  ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார்/\.

இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை 1ந்தேதி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றார். நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டார்.

இப்பொறுப்பிற்கு6  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் இருந்தும், தலைமை செயலாளர் வாய்ப்பு சண்முகத்திற்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில் அவரது பணிக்காலம் வரும் ஜூலை 31ந்தேதியோடு முடிவடைகிறது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் புதிய அதிகாரியை நியமிப்பதற்குப் பதில் தற்போது பணிபுரிந்து வரும் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு  பரிந்துரை வைத்தது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை  அதாவது 3 மாதங்களுக்கு தலைமை செயலாளர்  பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



author avatar
kavitha